Friday, August 27, 2010



கிளைகள் இல்ல மரம் நான்
இலைகள் இல்ல வரம் எனக்கு

வேர்கள் விரும்பா திசையில் என் எதிர்காலம்

தடம் பதிக்க கைவசம் நிழல் இல்லை

பொருந்தா தென்றல் போகின்ற வழியில்

நினைவுகளை கட்டி சேமித்து வைக்க
எந்த புன்னகையும் வாய்த்ததில்லை

Thursday, August 26, 2010



உதடும் உதடும்
சேர்ந்தும் விலகியும்
வார்த்தைகளை அழகாய் உச்சரிக்குமே

அது போலவே
உனக்கும் எனக்குமான
பிரிதல்களும் சேர்தல்களும்
காதலை அழகாக்குகிறது