Wednesday, September 21, 2011



வலியதன் வலுவில்

வளைந்தது என் வனம்

துளி விசமாய்

துளை கனமாய்

பிழை ரணமாய்

பீடித்த பின் புலன்கள்

நீடிக்கும் என் கணங்கள்

நெடிய பயணம்

இடைவெளியில்லா தடங்கள்

இயல்புகளற்ற அண்ட வெளி

முடிவுகளற்று அறுந்து போகிறது

எதிர்ப்பின் இலக்கணங்களுக்குள்

எதிர்பார்ப்பின் ஏளனங்கள்

வாட்டி வதைக்கும் வாழ்க்கைதனை

அழுது ரசிக்கும் ரசிகனாகிறேன்