
வலியதன் வலுவில்
வளைந்தது என் வனம்
துளி விசமாய்
துளை கனமாய்
பிழை ரணமாய்
பீடித்த பின் புலன்கள்
நீடிக்கும் என் கணங்கள்
நெடிய பயணம்
இடைவெளியில்லா தடங்கள்
இயல்புகளற்ற அண்ட வெளி
முடிவுகளற்று அறுந்து போகிறது
எதிர்ப்பின் இலக்கணங்களுக்குள்
எதிர்பார்ப்பின் ஏளனங்கள்
வாட்டி வதைக்கும் வாழ்க்கைதனை
அழுது ரசிக்கும் ரசிகனாகிறேன்