தீர்ந்தபாடில்லை
மிச்சமிருக்கும்
வார்த்தைகள்
புத்தக பையை
துழாவும் போதெல்லாம்
கிடைக்கும்
கடேசி சில்லறை காசாய்
ஒவ்வொருமுறையும்
கிடைக்கும் வார்த்தைகள்
யாரேனும் வாசிக்கும்போது
கவிதையாகிவிடும்
வார்த்தைகள்
யாருக்காகவேனும் வாசிக்கும்போது
கானலாகிவிடும் வார்த்தைகள்
என்னை பிரதிபலிப்பதால்
விலகி நிற்கும் வார்த்தைகள்
விலகி நிற்பதால்
என்னை பிரதிபலிக்கும் வார்த்தைகள்
ஆசான்கள் வந்து
அர்த்தமாக்கும் வார்த்தைகள்
ஆசான்கள் லாலேயே
அர்த்தம் இழக்கும் வார்த்தைகள்
என் வார்த்தைகளா?
எனக்கான வார்த்தைகளா ?
என் வழியிலான வார்த்தைகளா?
ஏதென்று அறியாமல்
நான் வார்த்தைகளற்று .....
No comments:
Post a Comment