Tuesday, May 31, 2016


யாதுக்காய் அவதானித்தேன்
கேட்க வைத்து விடுகிறீர்கள்
அடிகடி

கதவிடுக்கில் கைவிரல் போல
நைந்து போன வெறுமையில்
எதை கற்பேன் நான்

இயல்புகலற்ற பயணத்தில்
விதிகளற்று வீழ்கிறேன்

அர்த்தங்கலோடே
அர்த்தமற்று  இருக்கிறேன்

சிதறிய வார்த்தைகளிலும்
சிதறாமல் வெறுமை

தேடி தேடி தொலைக்கிறது
இந்த வெறுமை
என்னை 

No comments:

Post a Comment