skip to main |
skip to sidebar
நீங்கள் நீங்களாய்
இருக்கும் கவிதை வேண்டாம்
நீங்கள் நானாய் இருக்கும்
கவிதையின்
மடியில் மட்டுமே
உறங்குவேன் ....
என் இரு சக்கர
இறக்கையால்
பறந்து வந்தேன்....
நீந்தி கடக்க
எந்த புன்னகையும்
இல்லை...
இறக்கையின்
பெட்ரோல் மணத்தில்
எந்த புன்னகையையும்
விதைகாமலேயே
வந்துவிட்டேன்
எல்லாரையும் போல
யாதிலும் யாதாயும்
இருக்க இயலா
களையாய்
உங்களுக்கு...
பிழை திருத்தி
பிழையாக்கும்
எனக்கு
நான்
யாதாவேன்...
தேடலில்
தொலைவது
நானா?