Monday, December 31, 2012





நெடுங்காற்றில் ஆடும் 
ஒற்றை பனையாய்

வெற்றிருக்கை 
துணைக்கு அமரும் 
நெடும் பயணமாய் 

இருப்பறிய
இறந்து பார்க்கும் 
இயல்பாய் 

பசியடக்கா 
பானையாய்

வினை பொழுதுகளும் 
வீணாய் போக 

எப்படி நானறிவேன் 
இப்படியல்ல நீ என்று

No comments:

Post a Comment